Wednesday, 26 October 2011

நாளொரு நபி மொழி அறிந்து கொள்வோம் ! ( 27.10 .2011 )


உங்களில் ஒருவர் தன் இறைவனோடு மிகவும் நெருக்கமாக உள்ள

நேரம் சுஜூது (சிரம் பணிந்து தொழச்) செய்யும் நேரம்,

ஆகவே அதில் அதிகம் பிரார்த்தனை செய்யுங்கள் - நபி(ஸல்)

நூல்: முஸ்லிம்


ஆதார் அடையாள அட்டையை இலவசமாக, பொதுமக்கள் பதிவு செய்து பெற்றுக் கொள்ளலாம்.!

ஆதார் அடையாள அட்டை' பெற, தபால் நிலையம் மூலம் பதிவு செய்யும் பணி, இன்று முதல் துவக்கப்படுகிறது. இந்திய பிரத்யேக அடையாள அட்டை ஆணையத்துடன் மேற்கொண்ட புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் கீழ், இந்திய தபால் துறை அடையாள அட்டை வழங்குவதற்கான பதிவு செய்யும் பணியை மேற்கொண்டுள்ளது. இந்த அடையாள அட்டை மூலம் பல்வேறு பணிகள், பயன்களைப் பெற முடியும். வங்கி கணக்கு துவக்கவும், மருத்துவத்துக்கும், மொபைல்போன் இணைப்பு பெறவும், இந்த ஆதார் அடையாள அட்டை பயனுள்ளதாக இருக்கும்.
அடையாள அட்டை பெற, தபால் நிலையம் மூலம் பதிவு செய்யும் பணியை, தமிழக உள்துறை முதன்மைச் செயலர் ரமேஷ்ராம் மிஸ்ரா, இன்று சென்னையில் துவக்கி வைக்கிறார். தமிழக தபால் வட்டம் துவக்கும் இப்பதிவுப் பணி, சென்னையில் மயிலாப்பூர், தி.நகர் மற்றும் பூங்கா நகர் ஆகிய பகுதிகளில் உள்ள தலைமை தபால் நிலையங்களுக்கும், நவ., 1ம் தேதி முதல் விரிவுப்படுத்தப்படும்.

மேலும், நவ., 21ம் முதல் தமிழகத்தில் உள்ள 31 மாவட்ட தலைமை தபால் நிலையங்களுக்கும், அடுத்த 30 நாட்களில் 154 முக்கிய தபால் நிலையங்களிலும் விரிவுப்படுத்தப்படவுள்ளது. இந்த ஆதார் அடையாள அட்டையை இலவசமாக, பொதுமக்கள் பதிவு செய்து பெற்றுக் கொள்ளலாம். இதுகுறித்து, மேலும் விவரங்களை அறிய, 044-28582798, 0431-241245,0452-2526398,0422-2558204 ஆகிய தொலைபேசி எண்களில் தொடர்பு கொள்ளலாம் என, தமிழக வட்ட தலைமை தபால் துறை தலைவர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

-நன்றி;தினமலர்




Tuesday, 25 October 2011

நாளொரு நபி மொழி அறிந்து கொள்வோம் ! ( 26.10 .2011 )




யார் (உறுதியான) நம்பிக்கையுடனும் நற்கூலியை எதிர்பார்த்தும்

ரமளான் மாதத்தில் நோன்பு நோற்கின்றாரோ அவருடைய முந்தைய

பாவங்கள் அனைத்தும் மன்னிக்கப்படுகின்றன - நபி (ஸல்)

அறிவிப்பாளர்: அபூஹுரைரா(ரலி),

நூற்கள்: புகாரி, முஸ்லிம்

Monday, 24 October 2011

நாளொரு நபி மொழி அறிந்து கொள்வோம் ! ( 25.10 .2011 )



இறுதி மூச்சு தடுமாறுவதற்கு முன்பு வரை

மனிதனின் பாவ மன்னிப்புக் கோரலை

வல்ல அல்லாஹ் அங்கீகரித்து ஏற்றுக் கொள்கிறான்" நபி(ஸல்)

அறிவிப்பாளர்: அப்துல்லாஹ் பின் உமர்(ரலி)

நூல்: திர்மிதி

Sunday, 23 October 2011

நாளொரு நபி மொழி அறிந்து கொள்வோம் ! ( 24.10 .2011 )



பொய்யான பேச்சையும் பொய்யான நடவடிக்கைகளையும் விட்டு விடாதவர்,

தம் உணவையும் பானத்தையும் விட்டு விடுவதில் அல்லாஹ்வுக்கு எந்தத் தேவையுமில்லை ! - நபி(ஸல்)

அறிவிப்பாளர்: அபூஹுரைரா(ரலி),

நூல்: புகாரி

Saturday, 22 October 2011

நாளொரு நபி மொழி அறிந்து கொள்வோம் ! ( 23.10 .2011 )




இறுதி மூச்சு தடுமாறுவதற்கு முன்பு வரை மனிதனின்

பாவ மன்னிப்புக் கோரலை வல்ல அல்லாஹ் அங்கீகரித்து ஏற்றுக் கொள்கிறான் நபி(ஸல்)

அறிவிப்பாளர்: அப்துல்லாஹ் பின் உமர்(ரலி)

நூல்: திர்மிதி

Friday, 21 October 2011

ஒரு ஜாமத்தில் இரண்டு கவுன்சிலர்கள் !



ஒரு ஜாமத்தில் இரண்டு கவுன்சிலர்கள் நடந்து முடிந்த உள்ளாட்சி தேர்தலில் எமேனேஸ்வரம் ஜாமத்தை சார்ந்த இரண்டு கவுன்சிலர்கள் இரு வேறு வார்டுகளில் தேர்ந்து எடுத்து உள்ளர்காள் எல்லா புகழும் இறைவன் ஒருவனுக்கு இவர்கள் பெற்ற வாக்கு விபரம் 3 வார்டு- நூர்ஜஹான் அ தி மு க -592 ,சர்மிளா ராணி -தி மு க -382 ,கமிலா பீவி மு லீக் 101 அதை போன்று 14 வது வார்டில்- அப்துல் மாலிக் -356 ,சரவணன் பி ஜெ பி -325 சரவவணன் தி மு க 229 ,மேலும் பரமக்குடி நகராட்சி இல் மொத்தம் 4 முஸ்லிம் கவுன்சிலர்கள் தேர்ந்து எடுத்து உள்ளர்கால்