Wednesday, 26 October 2011

நாளொரு நபி மொழி அறிந்து கொள்வோம் ! ( 27.10 .2011 )


உங்களில் ஒருவர் தன் இறைவனோடு மிகவும் நெருக்கமாக உள்ள

நேரம் சுஜூது (சிரம் பணிந்து தொழச்) செய்யும் நேரம்,

ஆகவே அதில் அதிகம் பிரார்த்தனை செய்யுங்கள் - நபி(ஸல்)

நூல்: முஸ்லிம்


ஆதார் அடையாள அட்டையை இலவசமாக, பொதுமக்கள் பதிவு செய்து பெற்றுக் கொள்ளலாம்.!

ஆதார் அடையாள அட்டை' பெற, தபால் நிலையம் மூலம் பதிவு செய்யும் பணி, இன்று முதல் துவக்கப்படுகிறது. இந்திய பிரத்யேக அடையாள அட்டை ஆணையத்துடன் மேற்கொண்ட புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் கீழ், இந்திய தபால் துறை அடையாள அட்டை வழங்குவதற்கான பதிவு செய்யும் பணியை மேற்கொண்டுள்ளது. இந்த அடையாள அட்டை மூலம் பல்வேறு பணிகள், பயன்களைப் பெற முடியும். வங்கி கணக்கு துவக்கவும், மருத்துவத்துக்கும், மொபைல்போன் இணைப்பு பெறவும், இந்த ஆதார் அடையாள அட்டை பயனுள்ளதாக இருக்கும்.
அடையாள அட்டை பெற, தபால் நிலையம் மூலம் பதிவு செய்யும் பணியை, தமிழக உள்துறை முதன்மைச் செயலர் ரமேஷ்ராம் மிஸ்ரா, இன்று சென்னையில் துவக்கி வைக்கிறார். தமிழக தபால் வட்டம் துவக்கும் இப்பதிவுப் பணி, சென்னையில் மயிலாப்பூர், தி.நகர் மற்றும் பூங்கா நகர் ஆகிய பகுதிகளில் உள்ள தலைமை தபால் நிலையங்களுக்கும், நவ., 1ம் தேதி முதல் விரிவுப்படுத்தப்படும்.

மேலும், நவ., 21ம் முதல் தமிழகத்தில் உள்ள 31 மாவட்ட தலைமை தபால் நிலையங்களுக்கும், அடுத்த 30 நாட்களில் 154 முக்கிய தபால் நிலையங்களிலும் விரிவுப்படுத்தப்படவுள்ளது. இந்த ஆதார் அடையாள அட்டையை இலவசமாக, பொதுமக்கள் பதிவு செய்து பெற்றுக் கொள்ளலாம். இதுகுறித்து, மேலும் விவரங்களை அறிய, 044-28582798, 0431-241245,0452-2526398,0422-2558204 ஆகிய தொலைபேசி எண்களில் தொடர்பு கொள்ளலாம் என, தமிழக வட்ட தலைமை தபால் துறை தலைவர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

-நன்றி;தினமலர்




Tuesday, 25 October 2011

நாளொரு நபி மொழி அறிந்து கொள்வோம் ! ( 26.10 .2011 )




யார் (உறுதியான) நம்பிக்கையுடனும் நற்கூலியை எதிர்பார்த்தும்

ரமளான் மாதத்தில் நோன்பு நோற்கின்றாரோ அவருடைய முந்தைய

பாவங்கள் அனைத்தும் மன்னிக்கப்படுகின்றன - நபி (ஸல்)

அறிவிப்பாளர்: அபூஹுரைரா(ரலி),

நூற்கள்: புகாரி, முஸ்லிம்

Monday, 24 October 2011

நாளொரு நபி மொழி அறிந்து கொள்வோம் ! ( 25.10 .2011 )



இறுதி மூச்சு தடுமாறுவதற்கு முன்பு வரை

மனிதனின் பாவ மன்னிப்புக் கோரலை

வல்ல அல்லாஹ் அங்கீகரித்து ஏற்றுக் கொள்கிறான்" நபி(ஸல்)

அறிவிப்பாளர்: அப்துல்லாஹ் பின் உமர்(ரலி)

நூல்: திர்மிதி

Sunday, 23 October 2011

நாளொரு நபி மொழி அறிந்து கொள்வோம் ! ( 24.10 .2011 )



பொய்யான பேச்சையும் பொய்யான நடவடிக்கைகளையும் விட்டு விடாதவர்,

தம் உணவையும் பானத்தையும் விட்டு விடுவதில் அல்லாஹ்வுக்கு எந்தத் தேவையுமில்லை ! - நபி(ஸல்)

அறிவிப்பாளர்: அபூஹுரைரா(ரலி),

நூல்: புகாரி

Saturday, 22 October 2011

நாளொரு நபி மொழி அறிந்து கொள்வோம் ! ( 23.10 .2011 )




இறுதி மூச்சு தடுமாறுவதற்கு முன்பு வரை மனிதனின்

பாவ மன்னிப்புக் கோரலை வல்ல அல்லாஹ் அங்கீகரித்து ஏற்றுக் கொள்கிறான் நபி(ஸல்)

அறிவிப்பாளர்: அப்துல்லாஹ் பின் உமர்(ரலி)

நூல்: திர்மிதி

Friday, 21 October 2011

ஒரு ஜாமத்தில் இரண்டு கவுன்சிலர்கள் !



ஒரு ஜாமத்தில் இரண்டு கவுன்சிலர்கள் நடந்து முடிந்த உள்ளாட்சி தேர்தலில் எமேனேஸ்வரம் ஜாமத்தை சார்ந்த இரண்டு கவுன்சிலர்கள் இரு வேறு வார்டுகளில் தேர்ந்து எடுத்து உள்ளர்காள் எல்லா புகழும் இறைவன் ஒருவனுக்கு இவர்கள் பெற்ற வாக்கு விபரம் 3 வார்டு- நூர்ஜஹான் அ தி மு க -592 ,சர்மிளா ராணி -தி மு க -382 ,கமிலா பீவி மு லீக் 101 அதை போன்று 14 வது வார்டில்- அப்துல் மாலிக் -356 ,சரவணன் பி ஜெ பி -325 சரவவணன் தி மு க 229 ,மேலும் பரமக்குடி நகராட்சி இல் மொத்தம் 4 முஸ்லிம் கவுன்சிலர்கள் தேர்ந்து எடுத்து உள்ளர்கால்

நாளொரு நபி மொழி அறிந்து கொள்வோம் ! ( 22.10 .2011 )




தன் குணங்களைச் சிறப்பாக்கிக் கொண்டவனுக்கு

சுவனத்தின் மிக உயர்ந்த பகுதியில் ஒரு வீட்டைப் (பெற்றுத் தரப்) பொறுப்பேற்கின்றேன்" - நபி(ஸல்)

அறிவிப்பாளர் : அபூஉமாமா (ரலி)

நூல்: அபூதாவூத்

நாளொரு நபி மொழி அறிந்து கொள்வோம் ! ( 21.10 .2011 )



தான் உண்மையான கருத்துடையவனாக இருந்தும் தர்க்கம் புரியமால்

இருந்துவிடும் மனிதனுக்கு சுவனத்தின் மூலைகளில் ஒரு வீட்டை(ப்

பெற்றுத் தர) நான் பொறுப்பேற்கின்றேன். நபி(ஸல்)

அறிவிப்பாளர் : அபூஉமாமா (ரலி)

நூல்: அபூதாவூத்

Wednesday, 19 October 2011

நாளொரு நபி மொழி அறிந்து கொள்வோம் ! ( 20.10 .2011 )



கொடுமைக்குள்ளானவனின் முறையீட்டைக் குறித்து அஞ்சுங்கள்.

ஏனெனில், அவன் அல்லாஹ்விடம் தன் உரிமையையே கோருகின்றான்.

அல்லாஹ், உரிமையுடைய ஒருவனை உரிமை இழக்கச் செய்வதில்லை

- நபி(ஸல்) அறிவிப்பாளர் : அலீ (ரலி)

Tuesday, 18 October 2011

நாளொரு நபி மொழி அறிந்து கொள்வோம் ! ( 19.10 .2011 )


இறந்தவரைப் பின்தொடர்பவை மூன்று (அவற்றில்)

அவரின் குடும்பமும் செல்வமும் திரும்பிவிடுகின்றன.

அவரின் செயல்கள் மட்டுமே அவருடன் தங்கிவிடும். நபி(ஸல்)

அறிவிப்பாளர்:அனஸ் இப்னு மாலிக்(ரலி)

நூல்: புகாரி


Monday, 17 October 2011

நாளொரு நபி மொழி அறிந்து கொள்வோம் ! ( 18.10 .2011 )



தன் குணங்களைச் சிறப்பாக்கிக் கொண்டவனுக்கு

சுவனத்தின் மிக உயர்ந்த பகுதியில் ஒரு வீட்டைப் (பெற்றுத் தரப்)

பொறுப்பேற்கின்றேன் - நபி(ஸல்)

அறிவிப்பாளர் : அபூஉமாமா (ரலி)

நூல்: அபூதாவூத்

கருணாநிதி அரசால் தவறாகக் கொடுக்கப்பட்ட இந்த அனுமதியை ரத்து செய்ய இன்றுவரை ...................



கூடங்குள அணு உலைகளுக்குத் தமிழ்நாடு அரசு அளித்த அனுமதியில் இருந்து வெளிப்பட்ட விபரீத உண்மை

1988 நவம்பர் 20 ஆம் தேதியன்று சோவியத் அதிபர் திரு.கோர்பச்சேவும் இந்தியப் பிரதமர் திரு.ராஜீவ் காந்தி அவர்களும் கூடங்குள அணுமின் திட்டத்தில் கையெழுத்திட்டனர்.தமிழகத்தில் ஜனாதிபதி ஆட்சி அமலில் இருந்த அந்த நாளில் ஆளுனராகப் பதவி வகித்தவர் திரு.பி.சி.அலெக்சாண்டர்.

1989 ஜனவரி 29 இல் தி.மு.. ஆட்சி அமைத்தது. ஆட்சி அமைத்த18 வது நாளில் - அதாவது 16-2-1989 அன்று தமிழ்நாடு சுற்றுச்சூழல் மற்றும் காடுகள் துறை கூடங்குள அணுமின் திட்டத்திற்கான தன் அனுமதியை வழங்கியது. அந்த அனுமதியில் கையொப்பமிட்டவர் தமிழக அரசின் செயலாளராக இருந்த திரு.D.சுந்தரேசன் IAS.

அவர் வழங்கிய அனுமதியானது தமிழக அரசிற்கு அணு உலைகள் குறித்து இருந்த அறிவின்மையையும், அசிரத்தையையும் வெளிப்படுத்துவதாக அமைந்தது.

இரண்டு 1000 மெகாவாட் வி.வி..ஆர் அணு உலைகளுக்கே அணுசக்தித் துறை அனுமதி கோரியிருந்தது. ஆனால் தமிழக அரசோ எவ்வளவு மெகாவாட் அணு உலைகளுக்கு என்றெல்லாம் குறிப்பிடாமல் பொத்தாம் பொதுவாக அணு உலைகளுக்கு அனுமதியை வழங்குவதாக அறிவித்தது!

ஏழு மாதம் கழித்து தமிழ்நாடு அரசின் செயலாளராக இருந்த திரு.A.S.ஜெயச்சந்திரன் BA அவர்கள் 13.9.1989 ஆம் தேதியிட்ட கடிதத்தில் தமிழ்நாடு அரசிற்கு அணுசக்தி என்றால் என்ன என்றே தெரியாது என்பதைத் தெளிவாக வெளிப்படுத்தினார்.

அணு சக்தித் துறை அனுமதி கோரியிருந்த இரண்டு 1000மெகாவாட் அணு உலைகளுக்குப் பதிலாக அவர் நான்கு 500மெகாவாட் அணு உலைகளுக்கு அனுமதியை வழங்கிவிட்டிருந்தார்!

அதோடு நிற்கவில்லை! இந்த அனுமதியை தமிழ்நாடு அரசின் முதன்மைச் செயலாளர், தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாடு வாரியத்தின் தலைவர், தமிழ்நாடு சுற்றுச்சூழல் மற்றும் காடுகள் துறையின் தலைவர், கூடங்குளத் திட்டத்திற்கான நிர்வாக இயக்குனர், பாபா அணுசக்தி ஆய்வுக் கழகத்தால் முன்மொழியப்படும் ஒரு உறுப்பினர், மற்றும் மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் ஒரு உறுப்பினர் ஆகியோர்களால் ஆன ஒரு சிறப்புக் குழு பரிசீலிக்கும் என்றும் அவர் குறிப்பிட்டிருந்தார்.

ஆனால் அடுத்து வந்த காலத்தில் அவரால் கூறிப்பிடப்பட்டிருந்த சிறப்புக்குழுவானது தவறாக அளிக்கப்பட்டிருந்த அந்த அனுமதியை மாற்றியமைக்க எந்த வித நடவடிக்கையையும் எடுக்கவில்லை!

கருணாநிதி அரசால் நான்கு 500 மெகாவாட் அணு உலைகளுக்கு வழங்கப் பட்ட தவறான அனுமதியைக் கொண்டே இன்று கூடங்குளத்தில் இரண்டு 1000 மெகாவாட் அணு உலைகளின் கட்டுமானப் பணி தொடர்ந்து கொண்டிருக்கின்றது!

அணு உலைக் கட்டுமானப் பணியினைத் தற்காலிகமாக நிறுத்திவைக்க வேண்டும் என்ற தீர்மானத்தை சட்டசபையில் சமீபத்தில் நிறைவேற்றிய முதல்வர் ஜெயலலிதா கூட கருணாநிதி அரசால் தவறாகக் கொடுக்கப்பட்ட இந்த அனுமதியை ரத்து செய்ய இன்றுவரை எந்தவொரு முயற்சியையும் எடுக்கவில்லை!

-
THANKS;

டாக்டர்.வீ.புகழேந்தி MBBS, கல்பாக்கம்

- டாக்டர். ரா.ரமேஷ் MBBS, கோவை

http://kudankulam2011.wordpress.com/





Sunday, 16 October 2011

நாளொரு நபி மொழி அறிந்து கொள்வோம் ! ( 17.10 .2011 )





நாங்கள் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுடன் ஹஜ் செய்தோம்.

ஏழு நபர்கள் கூட்டாக ஒரு ஒட்டகத்தை அறுத்தோம். மாட்டையும்

ஏழு நபர்கள் கூட்டாக அறுத்தோம்.

அறிவிப்பவர்: ஜாபிர் (ரலி)

நூல்: முஸ்லிம்


Saturday, 15 October 2011

நாளொரு நபி மொழி அறிந்து கொள்வோம் ! ( 16.10 .2011 )

சுவர்க்கத்தை நோட்டமிட்டேன், அதில் அதிகமானவர்களை

ஏழைகளாக பார்த்தேன், இன்னும் நரகத்தை நோட்டமிட்டேன்,

அதில் அதிகமானவர்களை பெண்களாக பார்த்தேன்.

என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (புகாரி)


Friday, 14 October 2011

சொத்து வாங்கும் சொந்தங்களே !



பலரும் சொத்துக்களை வாங்கும் போது, அதை பத்திரப் பதிவு அலுவலகத்தில் பதிவு செய்து, அதற்கான பத்திரத்தை வாங்கி வைத்துக் கொள்கின்றனர். தங்களது சொத்து, பத்திரமாக உள்ளதாகக் கருதுகின்றனர்.ஆனால், சொத்து வாங்குவதில் முதல் படி தான், பதிவு செய்தல். அந்தச் சொத்தை வருவாய்த் துறையில் பதிவு செய்து, பட்டா பெற்றால் மட்டுமே, அது முழுமையாகச் சொந்தமாகும்.பட்டா மாறுதல் தொடர்பாக, புதிய வழிமுறைகளை வகுத்து, தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.


இதன்படி,


* கிராம நிர்வாக அலுவலர், ஒவ்வொரு திங்கள் கிழமையும், தனது கிராமத்தில் மனுக்களைப் பெற்று, ஒப்புகைச் சீட்டு வழங்க வேண்டும்.


* மனுதாரர், தனது மனுவுடன், ஆவணங்களின் ஜெராக்ஸ் பிரதியை அளித்தால் போதும். எவ்விதக் கட்டணமும் செலுத்த வேண்டியதில்லை. மூல ஆவணங்களைக் கொடுக்க வேண்டியதில்லை.


* கிராம நிர்வாக அலுவலர், நிர்வாகக் காரணங்களுக்காக, வேறு கிராமத்துக்கும் கூடுதல் பொறுப்பு வகித்தால், செவ்வாய்தோறும், பட்டா மாற்றத்துக்கான மனுக்களைப் பெற வேண்டும்.


* விண்ணப்பித்த தேதியில் இருந்து, இரண்டாவது வெள்ளிக்கிழமையன்று, தாசில்தார் அலுவலகத்துக்கு வந்து, தனது பட்டா மாறுதல் தொடர்பான உத்தரவைப் பெற்றுக் கொள்ளுமாறு, மனுதாரரிடம் கிராம நிர்வாக அலுவலர் தெரிவிக்க வேண்டும்.


* இந்த மனுக்களின் மீது, தனது அறிக்கையுடன், முதல் வெள்ளிக்கிழமை, தாசில்தார் அலுவலகத்துக்கு வி.ஏ.ஓ., சென்று, சம்பந்தப்பட்ட மண்டல துணை தாசில்தாரிடம் ஒப்படைக்க வேண்டும்.


ஒப்புகைச் சீட்டின் மறுபாதியில், துணை தாசில்தார் கையெழுத்திட வேண்டும். அன்றைய தினமே, அலுவலகக் கணினியில், மனுவின் விவரத்தைத் துணை தாசில்தார் பதிவு செய்ய வேண்டும்.


* ஆவணங்களை துணை தாசில்தார், வருவாய் ஆய்வாளர் பரிசீலித்து, 2வது வெள்ளிக்கிழமை மனுதாரர் வரும்போது, பட்டா மாற்றம் மற்றும் சிட்டா நகல்களை வழங்க வேண்டும். இவ்வாறு, 15 நாட்களில் பட்டா மாற்றம் செய்ய வேண்டும்.


* உட்பிரிவுக்கு உட்பட்ட பட்டா மாறுதல் என்றால், விண்ணப்பித்த தேதியில் இருந்து, நான்காவது வெள்ளிக்கிழமை பட்டா உத்தரவைப் பெற வேண்டும்.


இதைப் பயன்படுத்தி, சொத்து வாங்கியவர்கள் அதற்கான பத்திரங்களின் ஜெராக்ஸ் பிரதிகளுடன், கிராம நிர்வாக அலுவலரிடம் விண்ணப்பித்து, விரைவில் பட்டா பெற்றுக் கொள்வதே சிறந்தது.



தற்போது பின்பற்றப்படும் நடைமுறையால் ஆபத்து: ஒருவர் அதிகாரப் பத்திரம் மூலம், ஒரு சொத்தை பலருக்கும் விற்கிறார். அவ்வாறு அந்தச் சொத்து பெறும் நபர்கள், பதிவு அலுவலகத்துக்குச் சென்றால், அதே சொத்தைப் பலருக்கும் பதிவு செய்து தர வாய்ப்புள்ளது.இதனால், சொத்து உண்மையிலேயே யாருக்குச் சொந்தம் என்ற குழப்பம் வரும். பதிவு செய்யும் நபர், அதை பட்டாவாக மாற்றிக் கொள்ள வேண்டும் என்ற விழிப்புணர்வு, நம் மக்களிடையே இல்லை.


மேலும், ஒரு ரியல் எஸ்டேட் நிறுவனம், நூறு பிளாட் போட்டு, நூறு பேருக்கு விற்கலாம். அவற்றைப் பெறுவோர், அதை பத்திரப்பதிவு செய்து வைத்துக் கொள்வர். ஆனால், அதற்காக வருவாய்த் துறையில் விண்ணப்பித்து, பட்டா பெறுவதில்லை. இவ்வாறு விட்டு விடுவதால், அந்த நூறு பிளாட்களில் சிலவற்றை, பூங்காவுக்கும், சமுதாயக் கூடங்களுக்கும் வருவாய்த் துறை ஒதுக்கீடு செய்து விடலாம். நூறு பிளாட்களில், ஏதாவது 20 பிளாட்கள் இவ்வாறு ஒதுக்கப்பட்டு இருக்கும்.


ஆனால், அது தெரியாமல், பத்திரம் உள்ளது என்ற நம்பிக்கையில், சொத்து வாங்கியவர் இருப்பார். ஒரு கட்டத்தில், அங்கு வீடு கட்டச் செல்லும் போது தான், தனது பிளாட், பூங்காவுக்காக ஒதுக்கப்பட்டது எனத் தெரியவரும்.எனவே, பத்திரப்பதிவு முடிந்ததும், அதை வைத்து, வருவாய்த் துறையிடம் விண்ணப்பித்து, பட்டா மாறுதல் பெற்றுக் கொண்டால், இதுபோன்ற சிக்கலில் சிக்க வாய்ப்பில்லை.


நன்றி :
பா.பாஸ்கர் பாபு -

-



நாளொரு நபி மொழி அறிந்து கொள்வோம் ! ( 15.10 .2011 )




நிச்சயமாக அல்லாஹ் மக்களின் மீது ஸதகாவை (தானதர்மத்தை) கடமையாக்கியுள்ளான்.

அது மக்களில் பொருள் வசதி படைத்தவர்களிடம் வாங்கப்பட்டு, ஏழ்மையுள்ளவர்களிடம் திருப்பித் தரப்படும் நபி(ஸல்)

அறிவிப்பாளர் : அப்பாஸ் (ரலி)
நூற்கள்: புகாரி, முஸ்லிம்

Job Opportunities In Kuwait



Ali Abdul Wahab Sons & Co. is one of the leading local companies in furniture and electrical appliances and kitchens. It seeks diversification through expansion in the fashion industry, clothing, sports goods, picnics and camping equipments, not to mention its long experience in the distribution of consumer products and pharmaceuticals, as the company undertakes the distribution of pharmaceutical products for various pharmacies in Kuwait, aside of its possession to more than 22 pharmacies, to be considered the largest retailer of the pharmaceutical sector in Kuwait. Add to that, the company has a large share in the real estate residential & investment sector and through the deployment of high-end properties in prime locations in Kuwait.

As a result of the steady growth over the past 90 years, and the continuous efforts to provide a permanent suitable work environment for its over 1500 employees, all working hard and diligently to provide the best services and high quality, which has helped to raise the value of sales to more than $20 million per annum with a continuous growth.

Currently, it’s actively trading in the following sectors:

1. Home & Office Furniture
2. Kitchen Furniture
3. Premium Home Appliances & Electronics
4. Outdoor Products
5. Consumer Goods
6. Pharmaceutical
7. Real estate


ApplyJobCodeJobTitleBusinessUnit
Apply ATMAssistant Store ManagerFurniture and Carpets
Apply DESInterior DesignerFurniture and Carpets
Apply MGRVisual Merchandising ManagerFurniture and Carpets
Apply SASSales AssociateFurniture and Carpets
Apply VSMVisual MerchandiserFurniture and Carpets
Apply CASCashierFurniture and Carpets
Apply ICSIn Store Customer Service RepresentativeFurniture and Carpets
Apply MKAMarketing & PR CoordinatorMarketing
Apply SDESenior Graphic DesignerMarketing
Apply MREMarket Research AnalystMarketing
Apply STKStore Keeper - RetailSports and Fashion
Apply MERMerchandiserConsumer Goods
Apply SNOSupply Network Operations ManagerGeneral Administration
Apply LOMLogistics Manager (CTLM)Consumer Goods
Apply LCOLegal ConsultantLegal
Apply BDMBusiness Development ManagerSports and Fashion
Apply MDRMedical RepresentativePharmaceutical
Apply FNMFinancial Controller / ConsultantFinance
Apply FANFinancial AnalystFinance
Apply MGRManager - TrafficGeneral Administration
Apply MGRManager - TransportationGeneral Administration
Apply SPVSupervisor - WarehouseGeneral Administration
Apply MGRManager - WarehouseGeneral Administration
Apply SASSales AssociateSports and Fashion
Apply MGTManagement Trainee - (Fresh Graduates)General Administration

ApplyJobCodeJobTitleBusinessUnit
Apply UMGISP SupervisorConsumer Goods
Apply CASCashierFurniture and Carpets
Apply ACTAccountantFinance
Apply AASAdministrative AssistantGeneral Administration
Apply UMGSales Unit ManagerAppliances and Kitchens
Apply ASMAssistant Store Manager - RetailSports and Fashion
Apply MGRStore Manager - RetailSports and Fashion
Apply DESInterior DesignerFurniture and Carpets
Apply ROMRetail Operations ManagerAppliances and Kitchens
Apply DESGraphic DesignerMarketing
Apply MGRCurves Fitness Club Manager - (Female)Sports and Fashion
Apply DEVDeveloper - JD EdwardsICT
Apply PHCPharmacistPharmaceutical
Apply ATMCurves Fitness Assistant Club Manager - (Female) Sports and Fashion
Apply TRNCurves Fitness Club Trainer - (Female)Sports and Fashion

நாளொரு நபி மொழி அறிந்து கொள்வோம் ! ( 14.10 .2011 )



எனது நிலையும் மக்களின் நிலையும் ஒரு மனிதரின் நிலைக்கு ஒத்திருக்கிறது, அவர் தீ மூட்டினார்.
அவரைசுற்றிலும் அது ஒளி வீசியபோது விட்டில் பூச்சிகளும் நெருப்பில் விழும் இதர பூச்சிகளும்
அந்தத் தீயில்விழலாயின. அந்த மனிதரோ அவற்றைத்(தீயில் விழாமல்) தடுத்து கொண்டிருந்தார்.
அவை அவரையும் மீறிதீயில் விழுகின்றன.(இவ்வாறுதான்) நரகத்(தில்விழுவ) திலிருந்து தடுக்க உங்கள்
இடுப்புக்களை நான் பிடித்துக்கொண்டிருக்கிறேன்.(ஆனால்) நீங்களோ (என்னையும் மீறி) நரகத்தில்
நுழைந்து கொண்டிருக்கிறீர்கள்.
அறிவிப்பாளர் : அபூஹுரைரா (ரலி)
புஹாரி 6483)

Thursday, 13 October 2011

ஃபேஸ்புக்கில் எச்சரிக்கையுடன் முகம் காட்டுவதே நல்லது.! ! !

பேஸ்புக் தெரியுமா உங்களுக்கு? தெரியாவிட்டால் இந்த நூற்றாண்டில் வாழத் தகுதியற்றவர் இளைஞர் கூட்டம். ட்விட்டர் பரிச்சயம் இல்லை என்றால் நீங்கள் இந்தக் காலத்துக்கு ஒத்து வராத ஆள் என்கிறார்கள். இந்த சமூக வலைத்தளங்கள்தான் இன்றைய தகவல் பரிமாற்றத்தின் முதுகெலும்பு.
அரசியல்வாதிகள், தொழிலதிபர்கள் மற்றும் பிரபலமானவர்கள் போன்ற பரபரப்பாக இயங்குபவர்கள்கூட சூடான செய்திகளை ட்விட்டரில்தான் தருகிறார்கள். அவர்களைப் பின்தொடராமல் விட்டால், ஆறிப்போன தகவல்கள்தான் நமக்குக் கிடைக்கும். சிலரின் ட்விட்டர் செய்திகளைக் கவனித்தால் நிறைய கிசுகிசுக்கள் கிடைக்கும். இன்னும் சில காலத்தில் நம்மூர் கிராமத்தினரும் ட்விட்டரிலும் பேஸ்புக்கிலும் கணக்கு வைத்திருப்பார்கள். அந்த அளவுக்கு இந்த வலைத் தளங்கள் செல்வாக்குப் பெற்று வருகின்றன.
பேஸ்புக்கின் பெயரைத்தான் முகநூல் என்று மொழியாக்கம் செய்திருக்கிறது தமிழ்கூறும் நல்லுலகம்.
காலையில் பல் துலக்கிவிட்டேன் என்பது முதல் ஒபாமா வீட்டு நாய்க்குட்டிக்குக் காய்ச்சல் என்பது வரை உலகின் எல்லா நிகழ்வுகளையும் அறிவிப்பதற்கு இந்த இணையதளம் பயன்படுத்தப்படுகிறது. நான் வருத்தமாக இருக்கிறேன் என்று பேஸ்புக்கில் கண்ணீர் வடித்தால்,உலகத்தின் பல மூலைகளிலிருந்தும் ஆறுதல் வருகிறது. நமது பண்பாட்டைச் சிறையாக நினைக்கும் புதிய தலைமுறையினர், இந்த வசதிகளை நன்றாகவே பயன்படுத்திக் கொள்கிறார்கள்.
பருவநிலை மாற்றத்துக்கு எதிராகவும், மீனவர்களுக்கு ஆதரவாகவும் தெருக்களில் போராட்டம் நடக்கிறதோ இல்லையோ,ட்விட்டரிலும் பேஸ்புக்கிலும் கண்டிப்பாக நடக்கும். ஸ்பெக்ட்ரம் முறைகேடும், எகிப்து எழுச்சியும் காரசாரமாக விவாதிக்கப்படும். பி.டி. கத்திரிக்காய் வேண்டாம் என்றும், போஸ்கோ தொழிற்சாலை கூடவே கூடாது என்றும் காரசாரமாக பிரசாரம் செய்யப்படும். அரசுக்குக் கண்டனம் தெரிவிக்கப்படும். கையெழுத்து இயக்கம்கூட நடக்கும். இதெல்லாம் அரசின் காதுகளை எட்டுமா என்று அசட்டுத் தனமாகக் கேட்கக்கூடாது. இது நவீன போராட்டக் களம் என நினைத்துக் கொண்டு அமைதியாகப் போய்விட வேண்டியதுதான்.
சட்டங்களுக்கு இங்கு வேலை இல்லை. இந்திய இறையாண்மைக்கு எதிராகப் பேசினால் தேசியப் பாதுகாப்புச் சட்டம் பாயும்; மதகுருமார்களை கேலிச் சித்திரமாக வரைந்தால் ஆண்டுக் கணக்கில் தண்டனை கிடைக்கும்;நீதிமன்றத்தை அவமதித்தால் சிறைக்குச் செல்ல வேண்டும். இதுதான் பொதுவான சட்டம். சில மேற்கத்திய நாடுகள் பேஸ்புக்கில் எழுதுவதைக் கண்காணிக்கின்றன. விதிமீறல்கள் இருந்தால் தண்டிக்கின்றன. ஆனால்,இந்தியா போன்ற நாடுகளில் இன்னும் அந்த அளவுக்கு விழிப்புணர்வு இல்லை. இங்குள்ள வலையுலகம் இதையெல்லாம் பொருள்படுத்துவது இல்லை. எல்லோரும் திட்டப்படுகிறார்கள்,எல்லாமே விமர்சிக்கப்படுகின்றன. அந்த அளவுக்குச் சுதந்திரம் இருக்கிறது.
இந்தச் சுதந்திரம் இப்போது எதிர்மறையாகப் பயன்படுகிறது. பேஸ்புக்கில் கணக்கு வைத்திருப்போரின் தனிப்பட்ட தகவல்கள் எந்த அளவுக்குப் பாதுகாக்கப்படுகின்றன என்பது குறித்து அவ்வப்போது கேள்வி எழுப்பப்படுவதுண்டு. அண்மையில் பேஸ்புக் நிறுவனரின் கணக்கையே இணையக் குறும்பர் யாரோ திருடி,கண்டனச் செய்தியை வெளியிட்டார். சமூக வலைத்தளங்களைப் பயன்படுத்துவோர் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இணைய வலைத்தள ஜாம்பவானுக்கே இந்தக் கதி என்றால்,அவரை நம்பிக் கணக்கு வைத்திருக்கும் கோடிக்கணக்கானோரின் நிலை குறித்து கவலை எழுந்தது.
இப்போது இன்னொரு விவகாரம். பேஸ்புக்கில் கணக்கு வைத்திருப்போரில் பெரும்பாலானோர் தங்களது தனிப்பட்ட வகையிலான புகைப்படங்களை தளத்தில் வெளியிடுகின்றனர். அதுவும் தங்களைப் பற்றிய சுயவிவரக் குறிப்பில் இருக்கும் முகப்புப் புகைப்படம் மிகவும் பிரபலம். தன்னம்பிக்கை இல்லாதவர்கள்தான் முகத்தை மறைத்துக் கொள்வார்கள் என்று தத்துவம் வேறு சொல்லப்படுகிறது. இந்த முகப்புப் புகைப்படத்தை யார் வேண்டுமானாலும் பார்க்கலாம். பொதுவெளியில் காணக்கிடைக்கும். இது தவிர புகைப்படத் தொகுப்பும் இருக்கும். இப்போது இந்தப் புகைப்படங்கள் எல்லாம் திருடப்படுவது அம்பலமாகியிருக்கிறது. இந்தப் புகைப்படங்களைத் திருடி அப்படி என்ன செய்துவிட முடியும் என்கிறீர்களா?
தற்போது பேஸ்புக்கில் உள்ள புகைப்படங்களைத் திருடி ஆபாசமான டேட்டிங் இணையதளம் ஒன்று வெளியிட்டிருக்கிறது. லவ்லி ஃபேஸஸ் என்கிற அந்த இணையதளம் சுமார் 2.5 லட்சம் பேரின் பேஸ்புக் முகப்பு புகைப்படங்களை திருடியிருப்பதாக ஒப்புக் கொண்டிருக்கிறது. இந்தப் புகைப்படங்கள் அனைத்தும் முக உணர்வை அடையாளங் காணும் மென்பொருளின் உதவியுடன் வகைப்படுத்தப்பட்டு இவர் இப்படிப்பட்டவர்,இவருடன் டேட்டிங் செல்ல அணுகவும் என்கிற ரீதியில் சேவை அளிக்கிறது. இதில் ஆண்கள் பெண்கள் என வித்தியாசம் இல்லாமல் எல்லோரின் புகைப்படங்களும் இடம்பெற்றிருக்கின்றன. சமூக வலைத்தளங்களின் கட்டுப்பாடுகளை உடைத்து அனைவரையும் இணைக்கும் முயற்சி இது என்று இந்த டேட்டிங் இணையதள உரிமையாளர்கள் தங்களது செயலை நியாயப்படுத்தியிருக்கிறார்கள்.
ஆனால், ஒரு டேட்டிங் இணையதளத்தில் தனது படம் இடம்பெறுவதை,அதுவும் தன்னுடைய அனுமதியே இல்லாமல் இடம்பெறுவதை யாரும் விரும்ப மாட்டார்கள். என்னதான் அத்துமீறுதல், கட்டுடைத்தல் போன்ற நவீன மரபுகள் உருவாக்கிக் கொண்டிருந்தாலும், இந்தியச் சமூகம் இவற்றை உள்வாங்கிக் கொள்வதற்கு இன்னும் சில காலம் பிடிக்கும். அதுவரையில் ஃபேஸ்புக்கில் எச்சரிக்கையுடன் முகம் காட்டுவதே நல்லது.

THANKS ; வெளிச்சம்

Wednesday, 12 October 2011

இலவசமாக M.E /M.Tech படிக்க GATE நுழைவு தேர்வு !


GATE- என்ற நுழைவு தேர்வு இந்தியாவில் உள்ள IIT, NIT, அண்ணா பல்கலை கழகம் போன்ற மிக உயர்ந்த கல்வி நிறுவனங்களில் M.E/M.Techபடிக்க மத்திய அரசால் நடத்தப்படும் தேர்வாகும். இந்த தேர்வை எழுதி தேர்ச்சி பெற்று படிக்கும் மாணவர்களுக்கு மத்திய அரசு மாதம் ரூ.5,000 முதல் ரூ.9,000 வரை வழங்குகின்றது. இந்த உதவி தொகை மூலம் படிப்பை இலவசமாக படிப்பது மட்டும் இல்லாமல் நமது சிறிய தேவைகளையும் (ஹாஸ்டல், உணவு, புத்தகம்) நிறைவேற்றிகொள்ளலாம். இதில் முஸ்லீம்களையும் சேர்த்து இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 27% இட ஒதுக்கீடும் உள்ளது. தேர்வை பற்றிய விபரம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் உயர்ந்த தொழில் நுட்ப நிறுவனக்களான IIT, NIT, டெல்லி பல்கலை கழகம் போன்ற மத்திய பல்கலை கழகங்கள், இதர அரசு பல்கலை கழகங்கள், நிகர் நிலை பல்கலை கழகங்கள், மற்றும் இதர தனியார் உயர் கல்வி நிறுவங்களில் M.E/M.Tech, Phd படிக்க GATE என்ற நுழைவு தேர்வை மத்திய அரசு நடத்துகின்றது, இதில் நாம் தேர்ச்சி பெற்று அதிக மதிப்பெண் எடுப்பதின் மூலம் இந்தியாவின் மிக உயர்ந்த கல்வி நிறுவனங்களில் பணத்தை வாங்கிகொண்டு M.E/M.Tech/Phd படிக்க முடியும் (கல்லூரிக்கேற்ப அரசு மாதம் ரூ.5,000 முதல் ரூ.9,000 வரை வழங்குகின்றது). இந்த கல்வி உதவி தொகையை வாங்குவது மிகவும் எளிது. நீங்கள் குறிப்பிடும் வங்கி கணக்கு எண்ணுக்கு மாதமாதம் பணம் வந்து சேர்ந்துவிடும். இது மட்டும் இல்லை இந்த உயர்கல்வி நிறுவங்களில் கல்வி தரம் உயர்ந்ததாக இருக்கும் , இங்கு படிப்பவர்களுக்கு வளாக தேர்வு (campus interview) மூலம் மிக எளிதில் வேலைகிடைகின்றது. இறுதி ஆண்டு படிக்கும் போதே அதிக சம்பளத்தில் படித்ததற்க்கு ஏற்ப நல்ல வேலைகிடைக்கின்றது. மாதம் இலட்சங்களை வாங்கிகொண்டு வெளி நாட்டில் Phd படிக்க வாய்ப்புகளும் கிடைக்கின்றன

இந்த தேர்வை எழுதும் முஸ்லீம் மாணவரகளின் எண்ணிக்கை மிக மிக குறைவு, காரணம், இந்த நுழைவு தேர்வுகளை பற்றி முஸ்லீம் சமுதாயம் அறியாமல் இருப்பதும், அறிந்திருந்தாலும் இதெல்லாம் மிக கடினம் என்று ஒதுக்கி விடுவதாலும் தான், உண்மையில் நன்றாக படிக்கும் மாணவ மாணவிகளுக்கு எந்த தேர்வுகள் கடினமில்லை. தேர்வுகளில் அதிக மதிப்பெண் பெறுவது எப்படி? என்ற கட்டுரை நமது www.tntj.net இணையதளத்தில் உள்ளது.

GATE நுழைவு தேர்வை பற்றிய விபரம்

விண்ணப்பம் சமர்பிக்க கடைசி தேதி : அக்டோபர் 17

விண்ணப்பங்கள் ஆன்லைனில் கிடைக்கும்: http://www.iitk.ac.in/gate/gate2012/gateonline.php

விண்ணப்பத்தின் விலை : ரூ.1,000

தேர்வு எழுத தகுதியான மாணவர்கள் :

1. B.E/B.Tech எல்ல பொறியியல் படிப்புகள் படித்து முடித்தவர்கள் மற்றும் இறுதி ஆண்டு மாணவர்கள்.

2. AMIE மூலம் பொறியியல் படித்தவர்கள்

3. M.Sc கணிதம்/ புள்ளியியல்/ அறிவியல்( இயற்பியல், வேதியியல், தாவரவியல், விலங்கியல் etc…) மற்றும் MCA படித்தவர்கள்

தேர்வு நடைபெறும் தேதி : ஜனவரி 29 மற்றும் பிப்ரவரி 12,

தேர்வு முடிவுகள் வெளிவரும் தேதி : மார்ச் 15.

இந்த தேர்வை பற்றிய விபரங்கள் http://www.iitk.ac.in/gate/gate2012/index.php மேலும் அறிய sithiqu.mtech@gmail.com என்ற ஈ - மெயில் முகவரியை தொடர்பு கொள்ளுங்கள்

THANKS :-S.சி்த்தீக்.M.Tech

நாளொரு நபி மொழி அறிந்து கொள்வோம் ! ( 13.10 .2011 )


ஒவ்வொரு தூதரும் அற்புதங்களுடன் அனுப்பப்பட்டனர்.

எனக்கு வழங்கப்பட்ட அற்புதம் " திருக்குர்ஆன்" - நபிகள் நாயகம் (ஸல்)


நூல்: புகாரி, முஸ்லிம்


Tuesday, 11 October 2011

நாளொரு நபி மொழி அறிந்து கொள்வோம் ! ( 12.10 .2011 )


ஒரு மனிதர் நபி (ஸல்) அவர்களிடம் வந்து, ”ஒரு பெண்மணி அதிகம் தொழுகை, நோன்பு,

தர்மம் செய்பவளாகக்கருதப்படுகிறாள்; ஆனால் அவள் அண்டை வீட்டாருக்குத் தன் நாவால்

தொல்லை தருகிறாள்.(இவளைப் பற்றிதாங்கள் என்ன கூறுகிறீர்கள்?)” என்று கேட்டார்.

அதற்கு நபி (ஸல்) அவர்கள் இவள் நரகில் இருப்பாள்என்றார்கள். இன்னொரு பெண்மணி

குறைந்த நோன்பு, தர்மம், தொழுகை உடையவளாக இருக்கிறாள் என்றுகருதப்படுகிறாள்.

அவள் தர்மம் செய்தால் வெண்ணைத் துண்டுகளைத் தான் தர்மம் செய்வாள். ஆனால்

அவள்அண்டை வீட்டாருக்கு நாவால் தொல்லை தருவதில்லை. (இவளைப் பற்றி தாங்கள் என்ன கூறுகிறீர்கள்?) என்றுகேட்டார். தற்கு நபி (ஸல்) அவர்கள், ‘இவள் சுவர்க்கத்தில் இருப்பாள் என்றார்கள்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (­) நூல்: அஹ்மத் 9298