Sunday, 9 October 2011

நாளொரு நபி மொழி அறிந்து கொள்வோம் ! ( 10 .10 .2011 )



இரு மனிதர்களுக்கிடையில் நியாயமாக நடந்து கொள்வது ஒரு தர்மமாகும்.

வாகனத்தின் மீது ஏறுகின்ற ஒருவரை அதன் மீது ஏற்றி விடுவது ஒரு தர்மமாகும்.

அதுபோலவே அதன் மீது அவருடைய சுமைகளை ஏற்றி விடுவதும் ஒரு தர்மமாகும்.

ஒரு நல்ல வார்த்தை பேசுவதும் ஒரு தர்மமாகும்.

தொழுகைக்காக நீங்கள் எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடியும் ஒரு தர்மமாகும்.

ஊறு விளைவிக்கக் கூடிய பொருளொன்றை நடைபாதையிலிருந்து அப்புறப்படுத்துவதும் ஒரு தர்மமாகும். - நபி (ஸல்)

நூற்கள்: புகாரி, முஸ்லிம்

No comments:

Post a Comment