Monday, 26 September 2011

இளையான்குடியில் துப்பாக்கி சூடு நடத்திய டி.எஸ்.பி., திடீர் இட மாற்றம் !

பரமக்குடி கலவரத்தன்று இளையான்குடியில் துப்பாக்கிச்சூடு நடத்திய, டி.எஸ்.பி., இளங்கோ கன்னியாகுமரிக்கு திடீரென மாற்றம் செய்யப்பட்டார். ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடியில் கடந்த 11ம் தேதி இமானுவேல் சேகரன் நினைவு தின கூட்டத்திற்கு சென்றவர்களுக்கும், போலீசாருக்கும் இடையே பரமக்குடி ஐந்து முனை சந்திப்பில் தகராறு ஏற்பட்டு, துப்பாக்கிச்சூடு நடந்தது. இதை கண்டித்து, அன்று மாலை 6 மணிக்கு, ஒரு பிரிவினர் இளையான்குடி போலீஸ் ஸ்டேஷன் அருகே மறியலில் ஈடுபட்டனர். அங்கு பாதுகாப்பில் இருந்த டி.எஸ்.பி., இளங்கோ,கூட்டத்தை கலைக்க, டி.எஸ்.பி., துப்பாக்கி சூடு நடத்தினார். இதில், இளையான்குடி மேல்நிலைப்பள்ளியில் பிளஸ் 2 மாணவர் ஆனந்த்,16, காயமடைந்தார். அவரை சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.இந்நிலையில், இளையான்குடியில் துப்பாக்கிசூடு நடத்திய டி.எஸ்.பி., இளங்கோ கன்னியாகுமரி மாவட்ட குற்றப்பதிவேட்டு கூடத்திற்கு திடீர் மாற்றம் செய்யப்பட்டார். சென்னை நகரில் காத்திருப்போர் பட்டியலில் இருந்த எம்.ஸ்டாலின் சிவகங்கைக்கு மாற்றப்பட்டார்.

No comments:

Post a Comment