Monday, 26 September 2011

முஸ்லிம் மாணவிகளை தேர்வு எழுத அனுப்பாமல் முடக்கி வைப்பு ! தமிழக அரசே ஏர்வாடி மேல்நிலைப்பள்ளியில் தேர்வு மையம் ஏற்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் ! ! !

ஏர்வாடி அரசு மேல் நிலைப்பள்ளியில் 10ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 தேர்வு மையம் இல்லாததால் மாணவ, மாணவிகள் பெரும் அவதியடைகின்றனர். ஏர்வாடி அரசு உயர்நிலைப்பள்ளி 2000ல் மேல் நிலைப்பள்ளியாக தரம் உயர்த்தப்பட்டு ஆயிரத்து 200க்கும் அதிகமான மாணவர்கள் படித்து வருகின்றனர். அரசு பொது தேர்வு எழுதுவதற்கு 11 கி.மீ.,தொலைவில் உள்ள கீழக்கரை செல்ல வேண்டிய நிலையில் உள்ளனர். இதனால் மாணவர்களுக்கு மன உளைச்சலும், கால விரயமும் ஏற்படுகிறது.

இதில் மாணவிகள்தான் பெரும் அவதியடைகின்றனர்.நடப்பு கல்வியாண்டில் 10ம்வகுப்பில் 246,பிளஸ் 2 வகுப்பில் 162 பேரும் தேர்வு எழுத உள்ளனர்.பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் துல்கருணை பாட்சா கூறியதாவது: நீண்ட தூரம் செல்ல வேண்டும் என்பதால், பாதுகாப்பு கருதி கிராமப்புற பெற்றோர் முஸ்லிம் மாணவிகளை தேர்வு எழுத அனுப்பாமல் முடக்கி விடுகின்றனர். இதனால் மாணவிகளின் எதிர்காலம் பாதிக்கப்படுகிறது. இது குறித்து கடந்த ஆட்சியில் பலமுறை மனு கொடுத்தும் நடவடிக்கை இல்லை. மாணவர்களின் நலனுக்கு பல்வேறு திட்டங்களை அறிவிக்கும் அ.தி.மு.க.,அரசு ஏர்வாடி மேல்நிலைப்பள்ளியில் தேர்வு மையம் ஏற்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும், என்றார்.

No comments:

Post a Comment