Thursday, 15 September 2011

சமுதாய சீர் கேட்டிற்கு வித்திடும் இந்த சினிமாவைப் புறக்கணிப்போம் !

அந்திப்பட்டால் பாடங்களை மீட்டுவதில் ஆர்வம் காட்டிய மாணவர்கள்
இன்று டி.வி.க்களுக்கு முன்னால் காட்சி தரும் சோகங்கள்!
நல்ல விஷயங்களை கேட்பது, படிப்பது போன்ற நல்லறங்களை விட்டும் நம்மைத் தடுக்கிறது

குடிப்பழக்கம், புகைத்தல் போன்ற தீய பழக்க வழக்கங்களுக்கு
மிக விரைவில் மனிதனை அடிமையாக்கி வேடிக்கைப் பார்க்கின்றது இந்த சினிமாக்கள்!
நாகரிகம், ஸ்டைல் என்ற பெயரில் சினிமா நடிகர்களால் இவைகள் ஊக்குவிக்கப்படுகின்றது!
நாகரீக மோகம் கொண்ட இளைஞர்களுக்கு நடிகர்கள் தானே ஆசிரியர்கள்!?

விபச்சாரத்தில் வழுக்கி விழ மனிதனை கூவி அழைக்கின்றது இந்த சினிமாக்கள்!
அரைகுறையாக காட்சி தரும் அழகு மங்கையர்களைக் கண்டு களிப்பதற்கென்றே
ஒரு சமூகம் அலைமோதுவதை நாம் கண்கூடாகக் காண்கிறோம்!
இது தானே விபச்சார விபத்திற்கான முதல் எட்டு (படி)…!!

சமுதாய சீர் கேட்டிற்கு வித்திடும் இந்த சினிமாவைப் புறக்கணிப்போம்
பொண்ணான நேரத்தை மண்ணாக்காது
ஒவ்வொரு வினாடியையும் நல்ல விஷயங்களில் செலவு செய்வோம்

நச்சுப் பாம்புக்குப் பெயர் தான் நல்லபாம்பு
சினிமாக்கள் எவ்வளவு தான் நல்ல தோல் போர்த்தினாலும்
அது வடிகட்டிய அசிங்கம்… அசிங்கம்… அசிங்கம் தான்!

இந்த கேவலமான சினிமாக்களை புறக்கணித்து படிப்பு, வாசிப்பு போன்ற விஷயங்களில் கவணம் செலுத்துவதன் மூலம்
காலத்தை வீணாக்காது காலத்தின் கண்ணியத்தைப் பேணுவோமாக!

No comments:

Post a Comment