Monday, 26 September 2011

எச்சரிக்கை வீட்டு சாவியை நிலை வாசலில் வைக்கதிர்கால் !

பரமக்குடியில் கிராமங்களில் உள்ள வீடுகளில் நகைகள் திருடிய இரண்டு சிறுவர்கள் உட்பட மூன்று பேரை போலீசார் கைது செய்து 66 பவுன் நகைகளை பறிமுதல் செய்தனர் பரமக்குடி மாதவன் நகரை சேர்ந்த செல்வபிரகாஷ், 19, இவனது தம்பி, மற்றொரு 17 வயது கீழாம்பலை சேர்ந்த சிறுவன் ஆகியோர் கூட்டாக சேர்ந்து, பல இடங்களில் திருடியதும் தெரியவந்தது. போலீசார் மூன்று பேரையும் கைது செய்து அவர்களிடமிருந்து 10 லட்சம் ரூபாய் மதிப்புள்ள 66பவுன் நகைகள், வெள்ளி கொலுசுகள் மற்றும் மொபைல் போன்களை பறிமுதல் செய்தனர். கைது செய்யப்பட்ட சிறுவர்களிடம் நடத்திய விசாரணையில், அரியனேந்தல், முனியாண்டிபுரம், பொட்டிதட்டி , முத்துவர்ணபுரம் , தண்டராதேவிபட்டிணம் , வெங்கட்டான்குறிச்சி, சுப்புராயபுரம் ஆகிய கிராமங்களில் 100நாள் வேலைக்கு செல்லும் வீடுகளை குறிவைத்து திருடியுள்ளனர். கிராமங்களில் வெளியே செல்லும்போது, வீட்டு சாவியை நிலை வாசலில் வைத்து வீட்டு செல்வதை நோட்டமிட்டு, இருவர் காவலுக்கு நின்று கொண்டு. ஒருவன் மட்டும் வீட்டில் புகுந்து நகைகளை திருடியதாக, தெரிவித்துள்ளனர்.

No comments:

Post a Comment